சின்ன சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!
மும்பை:வார இறுதி நாளான இன்று சிறிய சரிவுடன் முடிவுற்றது பங்குச் சந்தை. இன்றைய வர்த்தக நேரம் துவங்கியபோதே சந்தையில் சரிவும் ஆரம்பமாகிவிட்டது.
ஆனாலும் நிப்டி தனது 'பெஞ்ச்மார்க்' எண்ணான 2,800 புள்ளிகளுக்கு மேலேயே இருந்து முடிந்திருக்கிறது.
உலோகப் பிரிவு, ஓஎன்ஜிசி, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.யு.எல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், அம்புஜா சிமென்ட்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க், ஐடியா செல்லுலார், விப்ரோ, டாடா பவர், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் வர்த்தகம் பிற்பகலுக்குப் பிறகே சூடுபிடித்தது.
ஹிண்டால்கோ, சன் பார்மா மற்றும் டாடா பவர் பங்குகள் நல்ல லாபம் கண்டன. டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுசுகி பங்குகள் இன்று நஷ்டத்தைச் சந்தித்தன.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 35.07 புள்ளிகள் ( 0.39 சதவீதம் ) குறைந்து 8,966.68 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தை நிப்டி 0.10 புள்ளிகள் மட்டும் குறைந்து 2,807.05 -ஆக நிலைப் பெற்றது.












Click it and Unblock the Notifications