திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர்?

Subscribe to Oneindia Tamil

Shashi Tharoor
திருவனந்தபுரம்: ஐ.நா. சபையின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் சசி தரூர் காங்கிரஸ் கட்சியி்ன் சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

மலையாளியான சசி தரூர் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச விவகாரங்களில் பெரும் அனுபவம் வாய்ந்தவர் சசி.

இவரை திருவனந்தபுரம் தொகுதியில் நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்தியில் மீ்ண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இவர் வெளியுறவு அமைச்சராகும் வாய்ப்பு கூட உள்ளது.

இந் நிலையில் திருவனந்தபுரம் வந்த சசி கேரள முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கருணாகரனை சந்தித்துப் பேசினார். தான் தேர்தலில் போட்டியிட விரும்புவதையும், அதற்கு அவரது ஆசிகளையும் சசி கோரியதாகத் தெரிகிறது.

இச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சசி, எத்தனையோ போரை திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து வெற்றிகரமாக மக்களவைக்கு அனுப்பியவர் கருணாகரன் என்றார்.

உங்களை வேட்பாளராக ஏற்க திருவனந்தபுரம் பகுதி காங்கிரஸ் நிர்வாகிகளில் பலர் தயாராக இல்லை என்று கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, சீட் பெற பலர் முயலலாம். பலரும் போட்டியிட விரும்பலாம். ஆனால் ஒருவருக்கு சீட் தரப்பட்டுவிட்டால் பின்னர் அனைவரும் இணைந்து செயல்படுவதே ஜனநாயகம். இம்முறை திருவனந்தபுரம் தொகுதியை வென்றே ஆவது என்று காங்கிரஸ் தீவிரமாக உள்ளது என்றார்.

சசி தரூரை வேட்பாளராக தேர்வு செய்ததி்ல் ராகுல் காந்திக்கு பெரும் பங்குண்டு என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+