இலங்கை-அரசியல் தீர்வுகாண ஆஸி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையின் வட பகுதியில் நடந்து வரும் இனப் படுகொலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட்டு அரசியல் தீர்வு காண வழி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் கூறுகையில், தனது கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் சுதந்திரமாக வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும். அவர்களை வெளியேற விடாமல் தடுப்பது நியாயமல்ல.
தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய உரிமைகள் கிடைத்திடும் வகையில் அரசியல் சீர்திருத்தத்தை செய்ய வேண்டியது இலங்கை அரசின் கடமை என்றார்.
ஆஸ்திரேலியாவில் ஏராளமான இலங்கைத் தமிழர்கள் தஞ்சமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications