For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'குடி'க்கு பணம் தர மறுத்த தாய்-தந்தையை கொன்ற மகன்

By Sridhar L
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாய் மற்றும் தந்தையை சொந்த மகன் வெட்டி கொன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், தோட்டானுத்து கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையா(65). இவரது மனைவி வைரத்தம்மாள் (60). இவர்களுக்கு பக்கிரி (30) என்ற ஒரு மகன் உள்ளார்.

வேலைக்கும் போகாமால் ஊர் சுற்றி வந்த பக்கிரி குடிப்பதற்கு பணம் கேட்டு தனது தாய், தந்தையரை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.

மகனை திருத்த முயன்ற பெற்றோர்கள் அவரை கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பக்கிரி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது தந்தை பொன்னையா, தாய் வைரத்தம்மாள் ஆகியோரை சரமாரியாக வெட்டினார்.

இதில் பொன்னையா சம்பவ இடத்திலே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார். படுகாயம் அடைந்த வைரத்தம்மாள் சிகிசைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திண்டுக்கல் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து பக்கிரியை கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X