கொசுவை ஒழிக்க புதிய மருந்து- விஞ்ஞானி தகவல்
கோவை: கொசுக்களை ஒழிக்க புதிய மருந்தை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் கண்டுபிடித்துள்ளது என்று விஞ்ஞானி சேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கழக முதன்மை கட்டுப்பாட்டாளர் சேகர் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்தியா உள்ளிட்ட 183 நாடுகள் இணைந்து ரசாயன ஆயுதங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்தெந்த நாடுகளில் ரசாயன ஆயுதங்கள் உள்ளன என்பது இதுவரை தெரியவில்லை.
ராசாயன ஆயுத தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வல்லமை இந்தியாவிற்கு உள்ளது. ரசாயன ஆயுத தாக்குதலில் இருந்து தப்பிக்க ராணுவ வீரர்கள், மற்றும் மருத்துவர்களுக்கு பயிற்சியை டிஆர்டிஓ வழங்கி வருகின்து.
கொசுக்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த புதிய வகை மருந்தை ராணுவ ஆராய்ச்சிக் மேம்பாட்டுக் கழகம் கண்டுபிடித்துள்ளது. இது ஸ்டாப் என்ற பெயரில் சந்தைக்கு வந்துள்ளது என்றார் விஞ்ஞானி சேகர்.