போலி நில ஆவணம் மூலம் ரூ. 2 கோடி மோசடி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் போலி ஆவணம் தயார் செய்து, அதன்மூலம் ரூ. 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து ஏமாற்றிய கும்பலை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். வங்கி மேலாளர் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.

கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் ஜான் பி ஜோசப். இவர் கேரளா மாநிலத்தில் கொச்சி, காக்கநாடு, குசுமகிரி அஞ்சல் ஆகிய பகுதிகளில் பிளான்டேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது சகோதரர் ஜார்ஜ் பி ஜோசப்பிற்கும், ராதாபுரம் அருகேயுள்ள உறுமன்குளத்தில் 308 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை வள்ளியூர் அம்பேத்கார் நகரை சேர்ந்த டேனியல், மார்த்தாண்டத்தை சேர்ந்த சுஜீன், கேரளா மாநிலம் நாராக்கல்லை சேர்ந்த வின்சென்ட், தச்சநல்லூரை சேர்ந்த முகமது செரிப், ராமையன்பட்டியை சேர்ந்த அன்னசாகிப் மனைவி ரசிதா பேகம், சுலைமான் மனைவி ரசிதா பேகம், இப்ராகிம் மனைவி சுபுராபேகம், கரிம்கான் மனைவி ஷபியா, இலந்தகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகள் பாத்தி்மாபேகம், பாபுமிஸ்ரிக்கான், மார்த்தாண்டத்தை சேர்ந்த கிறிஸ்துதாஸ், எர்ணாகுளத்தை சேர்ந்த ராஜன், எர்ணாகுளம் நார்த் பெச் வடக்கு பகுதியை சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் உள்பட 13 பேரும் போலியான ஆவணங்களை தயார் செய்து ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

இதே இடத்திற்கு மற்றொரு போலியான ஆவணங்களை தயார் செய்து ஒரு தனியார் வங்கியில் அடமானம் வைத்து ஒரு கோடி ருபாய் கடன் பெற்றனர். இதனையறிந்த நிலத்தி்ன் உரிமையாளர் எஸ்.பி ஆஸ்ரா கர்க்கிடம் புகார் செய்தார். இவர்களின் புகாரின் பேரில் மேற்கண்டவர்களில் 8 பேரை கைது செய்தனர். வங்கி மேலாளர் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+