ஆர்.எஸ்.எஸ்.ஸின் புதிய தலைவரானார் மோகன் பகவத்
Subscribe to Oneindia Tamil
நாக்பூர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய தலைவராக மோகன் பகவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பகவத், பொதுச் செயலாளராக இருக்கிறார். 9 ஆண்டுகளாக சுதர்சன் தலைவராக இருந்து வந்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் அகில பாரத பிரதிநிதிகள் சபை மாநாடு நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த சமயத்தில், பகவத் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக சுரேஷ் சோனி அறிவிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications