தேர்தலில் போட்டியிட தயார் - நடிகர் முரளி அறிவிப்பு!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிப்புத்தூர்: வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமை உத்தரவிட்டால் போட்டியிட தயார் என்று திரைப்பட நடிகர் முரளி அறிவித்துள்ளார்.
நடிகர் முரளி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஒரு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தற்போது நான் நடித்துள்ள நீ உன்னையறிந்தால், எங்க ராசி நல்ல ராசி, உள்பட மூன்று படங்களில் நடித்து வருகின்றேன்.
எனது மகன் அதர்வா நடித்துள்ள பானா என்ற திரைப்படம் ஜூலை 15 -ம் தேதி வெளி வருகின்றது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளேன். அதிமுக கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமை உத்தரவிட்டால் நான் எந்த தொகுதியில் வேண்டும் என்றாலும் போட்டி தயார் என்றார்.












Click it and Unblock the Notifications