தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கிறது திமுக- எனவே இந்த முறை கிடையாது: விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: தேமுதிகவின் தேர்தல் அறிக்கையை வைத்துத்தான் திமுக ஆட்சி நடத்தி வருகிறது. எனவே இந்த முறை தேர்தல் அறிக்கையை வெளியிட மாட்டோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நேற்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிப் பேசிய விஜயகாந்த் இவ்வாறு கூறினார்.
அவர் பேசுகையில், எனது தேர்தல் அறிக்கையைத்தான் முதல்-அமைச்சர் கருணாநிதி இன்றுவரை பின்பற்றி வருகிறார். ஆகவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் அறிக்கையை நான் வெளியிடமாட்டேன்.
நடக்கும் ஆட்சியைப் பார்த்தால் தேமுதிக ஆட்சி போலத்தான் உள்ளது. காரணம், எங்களது தேர்தல் அறிக்கையை வைத்துத்தான் திமுகவினர் ஆட்சி நடத்தி வருகின்றனர் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications