லஞ்ச ஏட்டுக்களுக்கு கட்டாய ஓய்வு-எஸ்பி அதிரடி
கொடைக்கானல்: லஞ்சம் வாங்கிய இரண்டு ஏட்டுகளுக்கு திண்டுக்கல் எஸ்பி கட்டாய ஓய்வு கொடுத்துள்ளார். இம்முடிவு அங்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற போது அங்கு பணியில் இருந்த போலீசார் சேகர், மற்றும் ரவி ஆகியோர் கட்டாயமாக லஞ்சம் தர வேண்டும் என்று அவரை வற்புறுத்தியுள்ளனர்.
இதை அவர்களுக்கு தெரியாமல் சுப்பரமணியம் வீடியோ பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தார். இதனைக் கண்ட உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து லஞ்சம் வாங்கிய சேகர் மற்றும் ரவி ஆகியோரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அப்போது, பணிக்கு முறையாக வராதது, குற்றவாளி ஒருவரை சட்டவிரோத காவலில் வைத்து சித்ரவதை செய்தது, லஞ்சம் வாங்கியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு மீண்டும் ஆளானார்கள்.
இதனால், மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து திண்டுக்கல் எஸ்பி பாரி அதிரடி விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிவில் அந்த இருவரும் காவல்துறை பணிக்கு களங்களம் விளைவித்தது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, சேகர், ரவி ஆகிய இரண்டு பேருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கி எஸ்.பி. பாரி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications