சிறையில் தீவிரவாதிகள் பிளாக்கில் 'அண்ணாச்சி'
சென்னை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள சரவணபவன் ஹோட்டல் அதிபர் 'அண்ணாச்சி' ராஜகோபால் சென்னை புழல் மத்திய சிறையில் தீவிரவாதிகள் பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜீவஜோதியி்ன் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபால் உள்ளிட்ட 10 பேர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு தீவிரவாதிகள் அடைக்கப்படும் பிளாக்' ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜகோபால் ஏ கிளாஸ் கோரினாலும் அந்த வகுப்பு வழங்கப்படவில்லை. அவர் தற்போது சாதாரணமாக மற்ற கைதிகளோடு தரையில் படுத்தே தூங்குகிறார். அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் மின்விசிறி உண்டு.
அவர் தண்டனை கைதி என்பதால் அவருக்கு கைதிகளுக்கான நம்பர் வழங்கப்பட்டுள்ளது. ராஜகோபாலின் நம்பர் 2432.
சிறைக்கு கொண்டு வரப்பட்டவுடன் கைதிகள் அணியும் வெள்ளை டிரெளசரும், வெள்ளை சட்டையும் வழங்கப்பட்டது. அந்த உடை இறுக்கமாக இருந்ததால், வேறு உடை தைக்கப்படுகிறது. அதுவரை வேட்டி, சட்டை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தண்டனை கைதி என்பதால் அவருக்கு சிறை உணவே. சர்க்கரை நோய் உள்ளதால் காலை, மாலையில் அவருக்கு சப்பாத்தி வழங்கப்படுகிறது. சர்க்கரை நோய்க்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சையும் மருந்துகளும் பெற்றுக் கொள்ளலாம்.
ராஜகோபாலுக்கும், அவருடன் இருப்பவர்களுக்கும் அவர்கள் வைக்கப்பட்டுள்ள பிளாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications