கோவை, கொச்சினுக்கு இலங்கை விமான சேவை ரத்து
இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் முதல் காலிறுதியில் இந்நிறுவனம் சுமார் ரூ. 250 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்தது. அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வைத்திருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஒப்பந்தத்தை முறித்து கொண்டது.
இதையடுத்து இந்நிறுவனம் சிக்கன நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையை வாரத்துக்கு 100 எண்ணிக்கையிலிருந்து 50 ஆக குறைத்துள்ளது. கோவை, கொச்சின், கோழிக்கோடு, ஹைதராபாத் ஆகிய நகருக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது.
இது இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மனோஜ் குணவர்தனே கூறுகையில்,
2008ம் ஆண்டின் முதல் காலாண்டில் நஷ்டத்தை சந்தித்தாலும் அடுத்த காலாண்டுகளில் அதை சரிகட்டிவிட்டோம். என்றாலும் இந்த ஆண்டில் மொத்தமாக பார்த்தால் லேசான நஷ்டம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சில சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். இந்திய விமான நிறுவனங்கள் மிக குறைந்த விலையில் விமானங்களை இயக்கி வருவதும் நஷ்டத்துக்கான காரணங்களில் ஒன்று என்றார்.