For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதம்பரம் கோயில்: அரசு வெளியேற வேண்டும்-பாஜக

By Sridhar L
Google Oneindia Tamil News

சிதம்பரம்: சிதம்பரம் கோயிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடாராஜர் கோயிலை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதை கண்டித்து சிதம்பரத்தில் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.

இதில் பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் கலந்து கொள்ள வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதசார்பற்ற அரசு என கூறிக்கொள்ளும் அரசு ஒரு மதத்தின் கோயிலை எடுத்துக் கொண்டது சரியான செயல் அல்ல. மத சார்பற்ற தன்மைக்கு எதிரானது.

அரசு இந்த கோயிலை எந்த நோக்கத்தில் எடுத்துக் கொண்டது என தெரியவில்லை. ஆனால் இதற்கு உள்நோக்கம் உள்ளது. இதற்கு எதிர்ப்புகளை காட்ட வேண்டிய நேரத்தில் காட்ட வேண்டிய விதத்தில் மே 13ம் தேதி காட்டுவோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X