பத்தாயிரம் கண்ட பங்குச் சந்தை!
மும்பை: பங்குச் சந்தையில் இந்த வாரம் அமோக வாரம்... நேற்று 10 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ் இன்றும், சாதக வர்த்தகம் காரணமாக முன்னேற்றப்பாதையில் தொடர்ந்தது.
பணவீக்கம் குறைந்ததும், ரிசர்வ் வஙே்கி மேலும் சலுகைக் குறைப்புகளை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவும் இந்த சாதக நிலை நீடிப்பதாக பங்குத் தரகர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று கலை வர்த்தகம் துவங்கிய போதே 38 புள்ளிகள் கூடுதலாகத் துவங்கிய சென்செக்ஸ் இடையில் சற்றே நழுவினாலும், வர்த்தக நேர முடிவில் 45 புள்ளிகள் ஏற்றம் கண்டிருந்தது.
கடந்த 4 தினங்களில் மட்டும் 1035 புள்ளிகளைப் பெற்றுள்ளது சென்செக்ஸ்.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 26 புள்ளிகள் கூடியுள்ளது. இதன்மூலம் வெற்றி கரமாக 3100 புள்ளிகளைக் கடந்துவிட்டது நிப்டி.
தொடர்ந்து அந்நிய முதலீட்டாளர்கள் பங்கு முதலீட்டில் ஆர்வம் காட்டி வருவதால் பங்கு வர்த்தகமும் சுணக்கமில்லாமல் தொடர்கிறது.
வார இறுதி நாளான இன்றைய வர்த்தகத்தில் ஏசிசி, டாடா ஸ்டீல், சன் பார்மா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஹிண்டால்கோ மற்றும் பார்தி ஏர்டெல் பங்குகள் நல்ல லாபத்தில் கைமாறின.
இன்றைய வர்த்தக முடிவில் பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 10048.49 (45.39), நிப்டி: 3108.65 (26.40)