திருமா தாழ்த்தப்பட்டோருக்கு உழைக்கவில்லை-பிரிசில்லா
நெல்லை: திருமாவளவன் தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை என ஜான்பாண்டியனின் மனைவியும்,தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளருமான பிரிசில்லா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்கும் கட்சியாக தமிழக மக்கள் முன்னேற்றம் கழகம் உள்ளது.
பாமக உருவான போது தென்மாவட்டங்களில் பாமகவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தோம். எங்கள் கட்சியை வைத்து வளர்ந்த பாமக இன்று தேவேந்திரகுல மக்களை புறக்கணித்து விட்டது.
தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுமொத்த பிரதிநிதியாக தங்களை அடையாளம் காட்டி கொள்ளும் திருமாவளவன் போன்றவர்கள் அந்த மக்களின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்யவில்லை. அவர்களின் அடிப்படை பொருளாதார நிலை உயரவில்லை. தலித் மக்களுக்கு உண்மையாக பாடுபட்டு வருவது தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மட்டுமே என்றார் அவர்.












Click it and Unblock the Notifications