திமுக: தஞ்சை திமுக சீட் யாருக்கு?-பழனிமாணிக்கம Vs சந்திரசேகரன்
தஞ்சை: தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக சீட்டை கைப்பற்றுவதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் தீவிர ஆதரவாளரான சந்திரசேகரன் ஆகியோர் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த 2004ல் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பழனிமாணிக்கம் மீது இப்போது தலைமை ஏதோ கோபத்தில் உள்ளது. இதனால் அவரை இம்முறை மீண்டும் சீட் கேட்டு விண்ணப்பிக்குமாறு திமுக தலைமை கூறவில்லை. அவரும் தலைமை அழைத்துச் சொல்லும் என்று கடைசி நாள் வரை காத்திருந்துவிட்டு மனு செய்தார்.
தொகுதியில் தனக்கு தனி செல்வாக்கு இருப்பதால் இந்த முறையும் தனக்கே சீட் தரப்படும் என அவர் கருதுகிறார்.
ஆனால், திமுக-தயாநிதி சிக்கல் தீர்ந்ததால் அங்கு ழனிமாணிக்கத்துக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. முரசொலி மாறன் பேரவை என்ற அமைப்பை நடத்தி வரும் தஞ்சை சந்திரசேகரன் என்பவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது. அவரும் இதற்கான கோதாவில் மும்முரமாக குதித்துள்ளார்.
தாயநிதி மாறனின் ஆசி உண்டு என்பதால் இவரது ஆதராவாளர்கள் எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்ற உற்சாகத்தில் உள்ளனர்.
இதையடுத்து தஞ்சை திமுகவில் சீட் பழனிமாணிக்கத்திற்காக அல்லது சந்திரசேகருக்காக என பலர் 'பெட் கட்டி' வருவதாகவும் தெரிகிறது.
ஆரம்பிச்சிட்டுங்கய்யா...!












Click it and Unblock the Notifications