கட்சி முடிவுக்கு கட்டுப்படுங்கள்- போராட்டம் கூடாது: தங்கபாலு எச்சரிக்கை
சென்னை: காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படாமல், குறிப்பிட்ட தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தொண்டர்களை கட்சித் தலைவர் தங்கபாலு எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்பதூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் நேற்று சத்தியமூர்த்தி பவன் வாசலில் போராட்டம் நடத்தினர்.
திருவேற்காடு அயனம்பாக்கம் பகுதியில் ஆக்மிரப்பு வீடுகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு வீராபுரத்தில் 1 சென்ட் நிலம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலருக்கு இன்னும் வீட்டு மனை கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர்கறும் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு அளித்த பேட்டியில்,
திமுகவும், காங்கிரஸ் கூட்டணி பலமிக்க கூட்டணி. எங்களுடன் இல்லாதவர்கள் தோல்வி காண்பது உறுதி. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீதமும், திமுகவுக்கு 30 சதவீதமும் ஓட்டு வங்கி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
கடந்த காலங்களில் திமுகவும், காங்கிரஸ் இரண்டு கட்சிகள் மட்டுமே இணைந்து 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளன. மத்தியிலும், தமிழ்நாட்டிலும் சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறோம்.
இலங்கை பிரச்சினையில் திருப்தி...
இலங்கை தமிழர்கள் பிரச்சினையிலும் நாங்கள் திருப்தியாகவே செயல்பட்டிருக்கிறோம். தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என்று ராஜபக்சே அறிவித்திருப்பதற்கும் நாங்கள் எடுத்த முயற்சிகள் தான் காரணம்.
தமிழ்நாட்டுக்கு மிகச் சிறந்த திட்டங்களை கொடுத்த பெருமை எங்களுக்கு உண்டு. தமிழக மக்கள் எங்களுக்கு வெற்றியை தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பாமக வருத்தப்படும்...
காங்கிரசுக்கு எதிராக முடிவெடுக்கும் முன்னரே பாமகவினர் அவர்களாகவே அரசியல் பண்பாடு காரணமாக பதவி விலகியிருக்க வேண்டும். எங்கள் கூட்டணியில் இருந்தவரை நல்ல மந்திரிகளாக செயல்பட்டனர். மே 16ம் தேதிக்கு பின்னர் அவர்கள் விலகியதற்காக வருத்தப்படுவார்கள்.
உள்விவகாரங்களை வெளியில் பேசக்கூடாது...
இந்த கூட்டணியில் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் திமுக தலைமை முடிவு செய்யும். அதை காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்பார்கள். சோனியா காந்தியின் தலைமையை ஏற்கும் கட்சிகளே கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது.
எந்த தொகுதிகளை பெற வேண்டும் என்பதை கட்சி தலைமையகம் முடிவு செய்யும். குறிப்பிட்ட தொகுதி தான் வேண்டும் என்பது போன்ற கட்சிக்குள் பேச வேண்டிய உள்விவகாரங்களை கட்சிக்கு வெளியில் பேசுவதோ, போராட்டம் நடத்துவதோ மேலிட முடிவை மீறுவதாகும். இனியும் இந்த மாதிரி போராட்டங்கள் நடந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தங்கபாலு.
-
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்!












Click it and Unblock the Notifications