கட்சி முடிவுக்கு கட்டுப்படுங்கள்- போராட்டம் கூடாது: தங்கபாலு எச்சரிக்கை
சென்னை: காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படாமல், குறிப்பிட்ட தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தொண்டர்களை கட்சித் தலைவர் தங்கபாலு எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்பதூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் நேற்று சத்தியமூர்த்தி பவன் வாசலில் போராட்டம் நடத்தினர்.
திருவேற்காடு அயனம்பாக்கம் பகுதியில் ஆக்மிரப்பு வீடுகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு வீராபுரத்தில் 1 சென்ட் நிலம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலருக்கு இன்னும் வீட்டு மனை கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர்கறும் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு அளித்த பேட்டியில்,
திமுகவும், காங்கிரஸ் கூட்டணி பலமிக்க கூட்டணி. எங்களுடன் இல்லாதவர்கள் தோல்வி காண்பது உறுதி. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீதமும், திமுகவுக்கு 30 சதவீதமும் ஓட்டு வங்கி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
கடந்த காலங்களில் திமுகவும், காங்கிரஸ் இரண்டு கட்சிகள் மட்டுமே இணைந்து 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளன. மத்தியிலும், தமிழ்நாட்டிலும் சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறோம்.
இலங்கை பிரச்சினையில் திருப்தி...
இலங்கை தமிழர்கள் பிரச்சினையிலும் நாங்கள் திருப்தியாகவே செயல்பட்டிருக்கிறோம். தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என்று ராஜபக்சே அறிவித்திருப்பதற்கும் நாங்கள் எடுத்த முயற்சிகள் தான் காரணம்.
தமிழ்நாட்டுக்கு மிகச் சிறந்த திட்டங்களை கொடுத்த பெருமை எங்களுக்கு உண்டு. தமிழக மக்கள் எங்களுக்கு வெற்றியை தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பாமக வருத்தப்படும்...
காங்கிரசுக்கு எதிராக முடிவெடுக்கும் முன்னரே பாமகவினர் அவர்களாகவே அரசியல் பண்பாடு காரணமாக பதவி விலகியிருக்க வேண்டும். எங்கள் கூட்டணியில் இருந்தவரை நல்ல மந்திரிகளாக செயல்பட்டனர். மே 16ம் தேதிக்கு பின்னர் அவர்கள் விலகியதற்காக வருத்தப்படுவார்கள்.
உள்விவகாரங்களை வெளியில் பேசக்கூடாது...
இந்த கூட்டணியில் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் திமுக தலைமை முடிவு செய்யும். அதை காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்பார்கள். சோனியா காந்தியின் தலைமையை ஏற்கும் கட்சிகளே கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது.
எந்த தொகுதிகளை பெற வேண்டும் என்பதை கட்சி தலைமையகம் முடிவு செய்யும். குறிப்பிட்ட தொகுதி தான் வேண்டும் என்பது போன்ற கட்சிக்குள் பேச வேண்டிய உள்விவகாரங்களை கட்சிக்கு வெளியில் பேசுவதோ, போராட்டம் நடத்துவதோ மேலிட முடிவை மீறுவதாகும். இனியும் இந்த மாதிரி போராட்டங்கள் நடந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தங்கபாலு.
-
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
மகளிர் உரிமைத் தொகை.. திட்டத்தை அறிவித்த திருச்சியில் நின்று மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை! -
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி..வைத்தியலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?குறுக்கே வந்த இளைஞர்.. போச்சே -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்!












Click it and Unblock the Notifications