வாசுதேவ நல்லூர் மதிமுக எம்.எல்.ஏ. விலகல்?

Subscribe to Oneindia Tamil

Sadan Tirumalaikumar
நெல்லை: நான் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேரப் போவதாக வெளியாகும் செய்திகள் வதந்தியே. வைகோதான் எனது உயிர். அவரை விட்டு நான் பிரிய மாட்டேன் என்று நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமார் கூறியுள்ளார்.

மதிமுக எம்.எல்.ஏக்கள் கண்ணப்பன், ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் சமீபத்தில் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் மதிமுகவிலிருந்து விலகப் போவதாக புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் வட்டாரத்தில் இதே பேச்சாக உள்ளது.

இதுகுறித்து சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ கூறுகையில், நேற்று மாலை வரை சென்னையில் தலைவர் வைகோவை சந்தித்து பேசிவிட்டு இன்று காலைதான் பொதிகையில் ஊர் திரும்பினேன். அதற்குள இப்படியோரு புரளியை யார், எதுக்காக கிளப்பி விட்டார்கள் என்று தெரியவில்லை.

நான் அரசியலுக்கு வந்ததே வைகோவால்தான். அவரால் கவரப்பட்டுத்தான் அரசியலுக்கு வந்தேன். 1970 முதல் அவருடன் இருக்கின்றேன்.

வைகோவின் தனி மனித ஓழுக்கம், கொள்கை, உழைப்பு, பாசம் ஆகியவைதான் என்னை அவரிடம் கவர்ந்தது. எனக்கு வேறுமாதிரி எந்தவித ஆசையும் கிடையாது. யாரோ பொழுது போகாமல் இதை கிளப்பி விட்டு இருக்கிறார்கள்.

இன்று மாலை தேனியில் நடக்கும் மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள கிளம்புகிறேன். கட்சி மாறுகிறீர்களா என்ற கேள்வியை கூட யாரும் என்னிடம் கேட்க முடியாது. அந்த அளவுக்கு வைகோமீது பற்றுள்ளவன் என்பது எல்லோருக்கும் தெரியும்.

எனது உயிர் இருக்கும் வரை வைகோவிட்டு பிரிய மாட்டேன் என்றார் திருமலைக்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+