லாகூர் தாக்குதல்-தாலிபான் பொறுப்பேற்பு
லாகூர்: லாகூர் போலீஸ் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை தாங்கள் தான் அரங்கேற்றியதாக தாலிபான் இயக்கத் தலைவர் பைதுல்லா மெக்சூத் தெரிவித்துள்ளார்.
லாகூரில் இம்மாதம் 3ம் தேதி கிரிக்கெட் விளையாட வந்த இலங்கை வீரர்கள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சோகம் மக்கள் மனதைவிட்டு முழுமையாக நீங்காத நிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு லாகூரில் உள்ள மனவன் போலீஸ் அகாடமிக்குள் நுழைந்த 10 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் இருந்து 12 கிமீ., தூரத்தில் தான் அகாடமி இருக்கிறது. தீவிரவாதிகளில் போலீஸ் அகாடமியின் இரண்டு பக்கத்தில் இருந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் போலீஸ் உடை அணிந்து, துப்பாக்கி ஏந்தி வந்ததால் யாருக்கும் முதலில் சந்தேகம் ஏற்படவில்லையாம்.
வந்த 10 தீவிரவாதிகளில் 8 பேர் வெடிகுண்டுகளை வீசிக்கொண்டே போலீஸ் அகாடமிக்குள் நுழைந்தனர். அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது துப்பாக்கியால் சராமாரியாக சுட்டனர். பின்னர் அவர்களை பணயக்கைதிகளாக பிடித்தனர்.
இதில் 27 போலீசார் மரணமடைந்தனர். 98 பேர் படுகாயமடைந்தனர். போலீஸ் மற்றும் துணை ராணுவ படையின் தீவிர முயற்சியால் 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 6 பேர் உயிருடன் பிடிபட்டனர். இதையடுத்து இந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது.
அவர்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் இருவர் ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்திகா மாகாணத்தினர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், அவர்கள் பாகிஸ்தானின் தெற்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைபகுதியில் இதற்கான சதி திட்டத்தை திட்டியுள்ளனர் என்றும், அவர்களுக்கு ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் பயிற்சி கொடுத்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இத்தாக்குதல் நடத்தியது நாங்கள் தான் என தலிபான் இயக்கத் தலைவர் பைதுல்லா மெக்சூத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் உள்விவகார துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறுகையில், தீவிரவாத இயக்கங்களின் ஆதிக்கம் பாகிஸ்தானில் அதிகரித்துவிட்டது. இது பாகிஸ்தானின் ஒற்றுமைக்கு, ஒருமைப்பாட்டுக்கும் விளைவிக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றார் ரஹ்மான் மாலிக்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications