For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கி பணியை விட்டு தேமுதிக வேட்பாளரான பாண்டியன்

By Sridhar L
Google Oneindia Tamil News

கோவை: வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு தேமுதிகவின் கோவை வேட்பாளராகியுள்ளார் ஆர்.பாண்டியன்.

தொழிலதிபராகவும் இன்னொரு முகம் கொண்டுள்ளவர் இந்த பாண்டியன். எனவே செலவுக்கு எந்த வஞ்சகமும் இருக்காது என நம்பலாம்.

எம்.எஸ்.சி. படித்தவர் பாண்டியன். 51 வயதாகும் இவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

கோவை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளராக தற்போது இருந்து வருகிறார்.

முதல் முறையாக தேமுதிக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். கோவை தொகுதியின் முதல் தேமுதிக வேட்பாளர் என்ற பெருமையுடன் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பாண்டியன், கோவை தொகுதியின் முதல் தேமுதிக எம்.பி. என்ற பெருமையையும் பெருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X