கூட்டணி கட்சிகள் விலகியதால் பாதிப்பில்லை-ஸ்டாலின்
சென்னை: நமது கூட்டணியில் இருந்த சில கட்சிகள் விலகினாலும் மக்கள் எழுச்சி நமக்கு ஆதரவாக உள்ளது என்று அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
திமுக இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் அதன் தலைமையகமான அன்பகத்தில் நடந்தது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இளைஞர் அணி எவ்வாறு பிரசாரம் செய்வது, கூட்டணி கட்சியுடன் எவ்வாறு இணைந்து பணியாற்றுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதில் ஸ்டாலின் பேசுகையில்,
நாடாளுமன்றத் தேர்தல் வந்து விட்டது. நாளை மறுநாள் திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. சில கூட்டணிக் கட்சிகள் இடம் மாறியிருக்கின்றன. நமது கூட்டணியில் இருந்த சில கட்சிகள் விலகினாலும் மக்கள் எழுச்சி நமக்கு ஆதரவாக உள்ளதை கண்கூடாகக் காண முடிகிறது.
இளைஞர் அணியினர் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். தெருமுனை பிரசாரம், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றின் மூலம் மக்களிடமும் நமது சாதனைகளை கொண்டு செல்ல வேண்டும்.
40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறும் வகையில் இளைஞர் அணியினர் பாடுபட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications