திண்டுக்கல் தேமுதிக வேட்பாளர் முத்துவேல்ராஜ்

அதிமுகவுக்குத் திருப்பம் தந்த தொகுதி திண்டுக்கல். அதிமுக பிறந்த பின்னர் நடந்த முதல் தேர்தல் திண்டுக்கல் இடைத் தேர்தல். அங்கு மாயத்தேவர் பெற்றுக் கொடுத்த வெற்றிதான் அதிமுகவின் தொடர் வெற்றிக்குப் போடப்பட்ட பிள்ளையார் சுழி.
அப்படிப்பட்ட திண்டுக்கல்லில் நிற்கிறார் முத்துவேல்ராஜ். 60 வயதாகும் முத்துவேல்ராஜ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள தேக்கம்பட்டிதான் இவரது சொந்த ஊர்.
நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். தேமுதிக மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக இருக்கிறார். எம்.எஸ்.சி, எம்.எஸ் படித்துள்ளார். கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
முதல் முறையாக தேர்தல் களத்தில் குதித்துள்ள முத்துவேல்ராஜ், தனது படிப்புத் தகுதியும், கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அனுபவமும், படித்தவர்கள், இளைஞர்களின் வாக்குகளை அள்ளித் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
வாக்காளர்களின் மனப் பூட்டை திறக்கும் வல்லமை முத்துவேல்ராஜுக்கு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications