வருண் மீது குண்டாஸ் பாய்ந்தது துரதிருஷ்டமானது-அர்ஜூன் சிங்
டெல்லி: வருண் காந்தி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது என மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் அர்ஜூன் சிங். தற்போது மத்திய மனிதவள துறை அமைச்சராக இருந்துவருகிறார்.
சமீபத்தில் இவர் நாடாளுமன்ற தேர்தலில் தனது மகன் மற்றும் மகளுக்கு சீட் தரும்படி காங்கிரஸ் மேலிடத்தை கேட்டு கொண்டார். ஆனால், இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்து விட்டது.
இதையடுத்து அவரது மகள் வீனா சிங், மத்திய பிரதேசத்தில் உள்ள சித்தி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் அர்ஜூன் சிங் கூறுகையில்,
வருண் காந்தி, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது மிகவும் துரதிருஷ்டமானது. எனது மகள் சித்தி தொகுதியில் போட்டியிடுவது அவரது சொந்த விருப்பம். இது குடும்ப விஷயம்.
ஆனால், இத்தொகுதியில் நான் எனது மகளுக்காக பிரச்சாரம் செய்ய மாட்டேன். காங்கிரசுக்கு தான் பிரச்சாரம் செய்வேன். நான் எப்போதும் கட்சிக்கு உண்மையானவனாக இருப்பேன் என்றார்.
அவரது சொந்த கருத்து-காங்கிரஸ்...
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சருமான கபில் சிபல் கூறுகையில்,
வருண் பற்றி கூறுவது அவரது சொந்த கருத்து. அதை என்னால் விமர்சிக்க முடியாது. மேலும், வருண் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதுக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது மாநில அரசின் வேலை என்றார்.












Click it and Unblock the Notifications