அதிமுக அல்லது பாஜகவுடன் கூட்டணி: கார்த்திக்
நெல்லை: வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக அல்லது பாஜகவோடு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி கூட்டணி சேரும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
நாடாளும் மக்கள் கட்சி நெல்லை மாவட்ட நிர்வாகிகளோடு நடிகர் கார்த்திக் நேற்று நெல்லையில் ஆலோசனை நடத்தினார்.
இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் துர்க்கை லிங்கம், மாநகர் மாவட்ட செயலாளர் ராணி சவுந்திரபாண்டியன், மாநகர தலைவர் ஐயப்பன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் காளிராஜ், மதுரை முத்துசாமி, பொன்.முருகன், கோவை பூபாலன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில கட்சி வளர்ச்சி பற்றியும், கூட்டணி பற்றியும் விவாதிக்கப்பட்டது. அதிமுக அல்லது பாஜகவுடன் இணைந்து இத்தேர்தலில் போட்டியிடலாம் என நிர்வாகிகல் மத்தியில் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளும் சீட் வழங்காவிட்டால் தேர்தலை தனித்தே எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் 19 ஒன்றிய செயலாளர்கள் கட்சியை விட்டு விலகியதாக கூறப்படும் சம்பவத்திற்கு கட்சி நிர்வாகிகளிடம் கார்த்திக் விளக்கம் கேட்டாராம்.
அதற்கு, முருகேச பாண்டியன், நல்லமுத்து, பாலு ஆகிய 3 மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டதால் அவர்கள் அப்படியொரு செய்தியை பரப்பி வருவதாக நிர்வாகிகள் அவரிடம் தெரிவித்தனர்.
3 பேரும் சிலரிடம் பணம் வாங்கி கொண்டு செயல்படுவதாகவும் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சேதுராமபாண்டியன் வழக்கு குறித்து கார்த்திக் கூறுகையில் கட்சியில் முக்கிய பிரமுகர் என்பதன் அடிப்படையில் ஆஸ்பத்திரியில் சென்று பார்த்தேன். அவர் விடுதலைக்கு நான் முழு முயற்சிகள் கொண்டு வருகிறேன். ஆனால் அவை யாவும் சட்டத்திற்கு உட்பட்டே இருக்கும் என நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
-
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications