பாக்.- ஈரானுக்கு ரகசியமாக கன்டெய்னரில் சென்ற 62 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதமும், வறுமையும் மக்களை வாட்டி வருகிறது. இதையடுத்து அங்குள்ள இளைஞர்கள் பிழைப்பு தேடி வெளிநாட்டு சென்று வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் கடும் சட்ட திட்டங்களை வைத்திருப்பாலும், முறையாக செல்வதற்கு தங்களிடம் போதிய பணம் இல்லாத காரணத்தாலும், இங்குள்ள இளைஞர்கள் சட்டத்துக்கு புறம்பாக வெளிநாட்டில் குடியேற முயற்சித்து வருகின்றனர்.
இவர்கள் ஐரோப்பாவுக்கு செல்வதற்கு தென் மேற்கு பாகிஸ்தான் பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பாகிஸ்தானின் குவட்டா நகரின் எல்லை பகுதியில் ஒரு கன்டெய்னர் லாரி தனியாக நின்று கொண்டிருந்தது.
அதில் இருந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என அபய குரல் கேட்டது. இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து கதவை உடைத்தனர். அப்போது 100க்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் 62 பேர் உயிரிழந்து விட்டதாகவும், மற்றவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் ஈரானுக்கு சென்று கொண்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதே குவட்டா நகரில் இது போல் நடத்த மற்றொரு சம்பவத்தில் 35 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications