பாக். மனித வெடிகுண்டுக்கு 35 பேர் பலி-150 பேர் படுகாயம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த மனித குண்டுவெடிப்பில் 35 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. சுமார் 150 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சக்வால் என்ற இடத்தில் உள்ள மசூதி ஒன்றில், ஷியா பிரிவு முஸ்லீம்கள் கிட்டத்தட்ட 2000 பேர் கூடியிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில் 35 பேர் உடல் சிதறிப் பலியானார்கள். 150 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறுகையில், இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.
அங்குள்ள மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், இதுவரை 17 சடலங்கள் கிடைத்துள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 8 போரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இன்னும் பல சடலங்களை போலீசார் மீட்டு வருகின்றனர் என்றார்.
மன்மோகன் சிங் பிறந்த ஊர்..
இந்த குண்டுவெடிப்பு நடந்த சக்வால் மாவட்டத்தில் தான் நமது பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications