திருவாரூரில் பிடிபட்ட 7 அடி முதலை
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் கிராமத்தில் பதுங்கியிருந்த 7 அடி நீள முதலையை தீயணைப்பு துறையினர் பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் கிராமத்தில் ஒரு புதருக்கு அருகே இருக்கும் எதையோ பார்த்து நாய்கள் குறைத்த வண்ணம் இருந்தன. இதை கண்ட வழிபோக்கர் ஒருவர் அந்த பக்கம் எட்டி பார்த்தார். அப்போது அங்கு 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் தீயணைப்புக்கு படையினர் தகவல் கொடுத்தனர். உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், கிராம மக்களின் உதவியுடன் சுமார் 180 கிலோ எடை கொண்ட அந்த முதலையை பிடித்தனர். பின்னர் அந்த முதலை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications