சென்னை-திருச்சி-அபுதாபி ஏர் இந்தியா விமான சேவை
திருச்சி: சென்னையிலிருந்து திருச்சி வழியாக வாரத்துக்கு இரண்டு முறை அபுதாபி செல்லும் ஏர் இந்தியாவின் விமான சேவை வரும் ஏப்ரல் 30 முதல் துவங்கவிருக்கிறது.
அபுதாபி செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து ஏர் இந்தியா நிறுவனம் சென்னையில் இருந்து திருச்சி வழியாக அபுதாபி செல்லும் புதிய விமான சேவையை துவக்கவிருக்கிறது.
முதல் விமானம் சென்னையில் இருந்து வரும் 30ம் தேதி அபுதாபி கிளம்ப இருக்கிறது. வாரத்துக்கு இரு முறை இயக்கப்படும் இந்த விமானம் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் புறப்படுகிறது.
இந்த விமானம் சென்னையில் இருந்து மதியம் 12.50 மணிக்கு கிளம்பி திருச்சிக்கு மதியம் 1.40க்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து 2.30 மணிக்கு அபுதாபிக்கு பறக்கிறது.
திரும்பும் வழியில் அபுதாபியில் இருந்து திருச்சிக்கு காலை 11.55 மணிக்கு வருகிறது. பின்னர் மதியம் 12.50 மணிக்கு திருச்சியில் இருந்து கிளம்பி 1.40க்கு சென்னை வருகிறது.
இதையடுத்து திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களின் எண்ணிக்கையும் வாரத்துக்கு 16 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக திருச்சியில் இருந்து தினமும் துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு விமானங்கள் சென்று வருகின்றன.
திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கில் விமான கட்டணத்தில் இந்த நிறுவனம் அதிரடி விலைகுறைப்பு செய்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சி வர இதுவரை ரூ. 2,330 வசூல் செய்த இந்த நிறுவனம் தற்போது அதை ரூ. 999 ஆக குறைத்துள்ளது.












Click it and Unblock the Notifications