பவர்ஃபுல் தயாநிதியை எதிர்கொள்ளும் எஸ்.எஸ்.சந்திரன்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம்தான் எஸ்.எஸ்.சந்திரனின் பூர்வீகம். ஆனால் குடும்பத்தினர் வெகு காலத்திற்கு முன்பே சிவகங்கைக்கு இடம் பெயர்ந்தனர்.
அங்குதான் பத்தாவது வகுப்பு வரை படித்தார் சந்திரன். பின்னர் திரையுலகில் புகுந்தார். ஆரம்பத்தில் கிடைத்த ரோல்களில் நடித்தார். அதில் காமெடி கிளிக் ஆகவே காமெடியனாக மாறினார்.
850-க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர, வில்லன் நடிகராகவும் நடித்து இருக்கிறார்.
68 வயதாகும் சந்திரன் திரையுலகில் கலைமாமணி விருது பெற்றவர். ஆரம்பத்தில் தீவிர திமுககாரராக இருந்தார். ஆனால் அங்கு தேர்தலில் போட்டியிட எந்த வாய்ப்பும் அளிக்கப்படாததால் அவரும், ராதாரவியும் சேர்ந்து திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
2001 முதல் 2007 வரை மேல்-சபை உறுப்பினராக இருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு லோக்பா சீட் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா.
அதிமுக தலைமைக் கழக பேச்சாளராகவும் திகழும் எஸ்.எஸ்.சந்திரனின் பேச்சுக்கு அதிமுக வட்டாரத்தி்ல் தனி ஆதரவே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.