தென் தமிழகத்தில் கன மழை-மேலும் 2 நாட்கள் தொடரும்
சென்னை: வங்க கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 48 மணிக்கு நேரத்தில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தை கோடை முழுமையாக ஆக்கிரமித்தருந்தது. இந் நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மக்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.
இலங்கை கடலோர பகுதிகளில் உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் நல்ல வானிலை மாற்றத்தை உணர முடிகிறது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தென் தமிழகத்தில் மழை விடாது பெய்து வருகிறது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் வறண்டிருந்த குற்றாலம் அருவியில் நீர் கொட்ட ஆரம்பித்துள்ளது.
திருச்செந்தூரில் 3 நாட்களாக கன மழை நீடிக்கிறது. மேலும் விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில்,
அடுத்த 48 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களிலும், தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும்.
திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் லேசாக மழை பெய்யும். சென்னையில் வானம் சில சமயங்களில் மேகமூட்டமாக இருக்கும். மழை பெய்யும் வாய்ப்பும் இருக்கிறது. இங்கு அதிகபட்சமாக சுமார் 35 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகும் என்றார்.
நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள பூதபாண்டி, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு, கன்னியாகுமரியில், பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாகர்கோவில், தக்கலை, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் கன மழை பெய்தது.
குழித்துறை, மயிலாடி, நாங்குனேரி, மணியாச்சி, பட்டுக்கோட்டை, திருச்செந்தூர், ராதாபுரம், கோவில்பட்டி, சாத்தான்குளம், போடிநாயக்கனூர், தென்காசி, ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களிலும் நல்ல மழை பெய்தது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கோடை மழை பெய்து மக்களை குளிர்வித்து காப்பாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
-
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications