விடுமுறை எடுக்காதீர்கள்-நீதிபதிகளுக்கு கோகலே அறிவுரை
நெல்லை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்எல் கோகலே இன்று காலை நெல்லை வந்தார். மாவட்டசெசன்சு கோர்ட்டுக்கு வந்த அவரை முதன்மை செசன்சு நீதிபதி விஜயராகவன், வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் சிவக்குமார், துணை தலைவர் பீர் முகைதீன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் அவர் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில்,
இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச் 16ம் தேதிதான் நீதிமன்ற பணிகள் தொடங்கின. அந்த இரண்டு மாதத்தில் நடந்த கஷ்டங்கள் உங்களுக்கு தெரியும். புதிய நீதிபதிகள் சீனியர் நீதிபதிகளின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.முக்கிய தீர்ப்புகளை குறிப்பு எடுத்துக் கொண்டு நல்ல அனுபவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சீனியர் ஆகிவிட்டால் நிர்வாக ரீதியாக பல்வேறு வேலைகள் வந்துவிடும். உயர வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். வழக்குகளை நிலுவையில் இல்லாமல் விரைந்து முடிக்க வேண்டும். அதிகமாக விடுமுறைகள் எடுக்க கூடாது.
குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு வந்து கடமை உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். நீதிபதிகளுக்கான மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் கோகலே.












Click it and Unblock the Notifications