இலங்கை படுகொலைகள்-சாலை மறியல், ஸ்தம்பித்த தமிழக-கர்நாடக போக்குவரத்து!
-தமிழன்பன்
இலங்கையில் நடந்து வரும் போரில் தமிழர் படுகொலைகளை கண்டித்து கர்நாடகத் தமிழர் பேரவை மற்றும் உலக தமிழ் மக்கள் அரங்கம் சார்பில் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சாலை மறியல் நடந்தது.
பெங்களூர்-ஓசூர் எல்லையான அத்திபள்ளி வளைவில் சுமார் ஒருமணி நேரம் நடந்த இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்துப் போனது.
வாகனங்களில் இருந்த மக்களிடம் துண்டறிக்கைகள் வழங்கி போராட்டக்காரக்கள், மத்திய அரசு இந்த விஷயத்தில் இலங்கைக்கு மறைமுகமாக உதவுவதாக கோஷமிட்டனர்.
இதையடுத்து கர்நாடக காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டம் செய்தவர்களை கலைத்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.
போராட்டம் நடத்திய கை.அறிவழகன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தி்ல ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து சீராக பல மணி நேரம் பிடித்தது.













Click it and Unblock the Notifications