மே 8ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு?
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 8ம் தேதி வெளியிடப்படும் என தெரிகிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு கடந்த மார்ச் 2ம் தேதி ஆரம்பித்து 23 ம் தேதி முடிந்தது. சுமார் 7 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர்.
சுமார் 54 மையங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் 56 லட்சம் விடைத்தாள்களை திருத்தி வருகின்றனர். இந்த பணி கடந்த மார்ச் 30ம் தேதி முதல் நடந்து வருகிறது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிக்கும் மேல் நிறைவடைந்துவிட்டன்.
வரும் 22ம் தேதிக்குள் இந்த பணி முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் வரும் மே 13ம் தேதி தேர்தல் நடக்கவிருப்பதால் அதற்கு முன்னதாகவே முடிவுகளை அறிவித்துவிட தமிழநாடு அரசு பொது தேர்வு ஆணையம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து அடுத்த மே மாதம் 8ம் தேதி பிளஸ் 2 முடிவுகள் வெளிவரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. மதிப்பெண் பட்டியலை உடனே வழங்கவும் தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக பணிகளை விரைந்து செயல்படுத்தி வருகிறது. அதே சமயத்தில் மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணிகள் எந்த பிழையும் இல்லாமல் துல்லியமாக நடக்க கூடுதல் ஆட்களையும் தேர்வுத்துறை வேலையில் அமர்த்தியுள்ளது.