நார்வே இலங்கை தூதரகம் மீது தமிழர்கள் தாக்குதல்

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி ஐரோப்பிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா என உலரம் முழுவகும் தமிழர்கள் கடந்த ஒருவார காலமாக போராட்டங்கள், பேரணிகள் நடத்தி வருகின்றனர்.
ஓஸ்லோவிலும் கடந்த 5 நாட்களாக இலங்கை தூதரகம் முன் தமிழர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை இலங்கை பாதுகாப்பு வளையத்துக்குள் அந் நாட்டு ராணுவம் 300 கிரனைட்களை வீசி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய செய்தி வெளியானதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் கொதிப்படைந்தனர்.
பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாரை தள்ளிவிட்டுவிட்டு இலங்கை தூதரகத்துக்குள் நுழைந்த அவர்கள் ஜன்னல்கள் மற்றும் மேஜைகள், நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். அவர்களை போலீசார் உடனடியாக வெளியேற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் பங்கேற்றனர். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
மன்னிப்பு கோரிய நார்வே:
தூதரகம் மீது நடந்த இந்தத் தாக்குதலுக்கு இலங்கையிடம் நார்வே மன்னிப்பு கோரியுள்ளது.
இலங்கையில் நார்வேயின் முயற்சியால் 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை போர் நிறுத்தம் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் போராட்டம்:
இந் நிலையில் இலங்கை தமிழர்களை காப்பாற்ற கோரியும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் ஆஸ்திரேலியாவில் சுமார் ஆயிரம் தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் பாராமட்டா பகுதியில் மூன்று தமிழர்களுடன் துவங்கிய போராட்டம் ஒன்று தற்போது பல்கி, பெருகி ஆயிரம் பேரை கொண்ட உண்ணாவிரத அறப்போராட்டமாக மாறியுள்ளது.
இதில் குழந்தைகள், பெண்கள் என தமிழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய பிரதமரின் இல்லமான கிரிபிலி முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக தெரிவித்துள்ளனர். இவர்களை சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications