கருத்தரங்கில் ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் ரகளை
டெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்ட டெல்லி கருத்தரங்கில் ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.
டெல்லியில் உள்ள ஐஐசி கட்டடத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது.
அப்போது பாகிஸ்தானின் தி நியூஸ் செய்தியாளர் கான் யூசுபாய் என்பவர், மீடியா செய்திகளால் இந்தியா, பாகிஸ்தான் நல்லுறவு கெடுகிறதா என்ற தலைப்பில் பேசினார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்திய மீடியாக்கள் செய்தி வெளியிட்ட விதத்தை அவர் குறை கூறிப் பேசினார்.
இதையடுத்து பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த 10 பேர் (ஸ்ரீராம் சேனா அமைப்பினர் என பின்னர் தெரிய வந்தது) எழுந்து பாகிஸ்தான் ஒழிக என கோஷமிட்டனர். மேலும், உடனடியாக இந்த கருத்தரங்கை நிறுத்த வேண்டும் எனவும் கோரினர்.
இதையடுத்து அங்கு போலீஸார் உள்ளே புகுந்தனர். போராட்டத்தில் குதித்தவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக வைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் போகாமல் பாகிஸ்தானையும், பாகிஸ்தான் மீடியாக்களையும் எதிர்த்து கோஷமிட்டு ரகளை செய்தனர்.
பின்னர் போலீஸார் அவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பின்னர் கருத்தரங்கம் தொடர்ந்து நடந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?











Click it and Unblock the Notifications