சிவகங்கை வாக்காளர்களுக்கு லஞ்சம்!-அதிமுக
சிவகங்கை: சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க கோரி பணம், பொருள் வழங்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகளிடம் அதிமுக புகார் செய்துள்ளது.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுகின்றார்.
ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.இருப்பினும் அங்கு காங்கிரஸார் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக ஓட்டு போடக்க கோரி, தொகுதியில், பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள், சேலைகள், கடிகாரம், பணம் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சியினர் வழங்கி வருகின்றனர் என்று அதிமுக புகார் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் சோழன் சித.பழனிச்சாமி கூறுகையில், தேர்தல் அதிகாரியிடம் இப் பிரச்சனை பற்றி பலமுறை நேரிலும், தொலைபேசியிலும் புகார் தெரிவித்தும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக உடனடியாக தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications