For Daily Alerts
Just In
தொகுதி பக்கமே வராத காங். எம்.பி மீது ஷூ மற்றும் கல்வீச்சு-மக்கள் ஆத்திரம்
துப்ரி தொகுதியின் தற்போதைய எம்.பி. அன்வர் உசேன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் ஜெயித்த பின்னர் தொகுதிப் பக்கமே வரவில்லை. மேலும் கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றவில்லை.
இந்த நிலையில் மீண்டும் துப்ரி தொகுதியில் போட்டியிடுகிறார் அன்வர் உசேன். அத்தொகுதிக்குட்பட்ட கான்பாரி என்ற இடத்தில் காங்கிரஸ் சார்பில், தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது.
இதில் அன்வர் ஹூசேன் கலந்து கொண்டார். அப்போது அன்வர் மீது ஆத்திரத்தில் இருந்த வாக்காளர்கள், திடீரென ஷூக்கள், செருப்புகளை கழற்றி அவர் மீது எறிந்தனர். மேலும் கற்களையும் எடுத்து சரமாரியாக வீசினர்.
ஆனால் அதிலிருந்து தப்பி விட்டார் அன்வர். போலீஸார் தலையிட்டு அன்வர் உசேனை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
Comments
Story first published: Saturday, April 18, 2009, 13:45 [IST]