நெல்லை-தூத்துக்குடி: 54 பேர் தேர்தலில் போட்டியிட தடை
நெல்லை: தேர்தல் செலவுக் கணக்கைக் காட்டாத தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 54 பேர் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த முறை நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்தல் செலவு கணக்குகளை ஒப்படைக்காதவர்களின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.
அதன்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 54 பேர் இடம் பெற்றுள்ளனர். நெல்லை சட்டசபைத் தொகுதியில் 4 பேரும், பாளை 8, வாசுதேவநல்லூர் 3, சங்கரன்கோவில் 2, கடையநல்லூர் 3, தென்காசி 3, ஆலங்குளம் 1, சேரன்மகாதேவி 3, அம்பை 3, நாங்குநேரி 4 மற்றும் ராதாபுரம் உள்பட மொத்தம் 40, தூத்துக்குடி 2, கோவில்பட்டி 3, சாத்தான்குளம் 3, திருச்செந்தூர் 4, திருவைகுண்டத்தில் 2 உள்பட 14 பேரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதில் இடம் பெற்றுள்ளவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications