அதிமுகவிலிருந்து விலகினார் லியாகத் அலி கான்
சென்னை: அ.தி.மு.க. சிறுபான்மை நலப்பிரிவு மாநில செயலாளர் லியாகத் அலிகான் அக்கட்சியிலிருந்து விலகி விட்டார். திமுக அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து லியாகத் அலிகான் வெளியிட்டு உள்ள அறிக்கை:
அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் பதவியில் இருந்தும், வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு பொறுப்பில் இருந்தும் என்னை நான் விடுவித்துக்கொள்கிறேன்.
கடந்த இருபது ஆண்டுகளாக எங்கள் உழைப்பெல்லாம் விழலுக்கு இரைத்த நீராக போய்விட்டது. எம்.ஜி.ஆர்.விசுவாசியாக வாழ்வை தொடர்வோம் என்று கூறியுள்ளார்.
மேலும், சிறுபான்மை சமூக புரட்சி இயக்கம் என்ற அமைப்பையும் லியாகத் அலிகான் தொடங்கி உள்ளார்.
இதையடுத்து அமைச்சர் மு.க.ஸ்டாலினை கா.லியாகத் அலிகான் நேரில் சந்தித்த அவர் லோக்சபா தேர்தலில் திமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது அமைப்பு ஆதரவு தரும் என்றும் தெரிவித்துள்ளார்.