சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்தார் சரத்
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நேற்று இந்த தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று வேட்பாளர்களை அறிவித்தார் சரத்குமார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
வேட்பாளர்கள் விவரம்:
நெல்லை - கரு.நாகராஜன்.
தூத்துக்குடி - சாலமன் என்ற கராத்தே சரவணன்.
திருப்பூர் - தளி எம்.சிவகுமார்.
நாமக்கல் - சுரேஷ் காந்தி.
ஸ்ரீபெரும்புதூர் - ராவணன் ராமசாமி.
தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா வல்லரசாக அணு சோதனை நடத்தி உலக அரங்கை திரும்பி பார்க்க வைத்த பாரதீய ஜனதா அரசு அமைய வேண்டும். அத்வானி பிரதமராக வேண்டும். இதற்காக சமத்துவ மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார் சரத்குமார்.