வருண் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்

பிலிபித் தொகுதியில் முஸ்லீம்களுக்கு எதிராக துவேஷமாக பேசிய வழக்கில் சிக்கி கைதாகி சிறை சென்று தற்போது பரோலில் வெளியே வந்துள்ளார் வருண் காந்தி.
இனிமேல் இது போல பேச மாட்டேன் என அவர் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த உறுதிமொழியின் பேரில்தான் அவருக்கு உச்சநீதமன்றம் 2 வார கால பரோல் அளித்துள்ளது.
இந்த நிலையில் பிலிபித்தில் போட்டியிட இன்று பிற்பகல் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் தாயார் மேனகா காந்தியும், பாஜக தலைவர்கள், தொண்டர்களும் உடன் வந்தனர்.
இருப்பினும் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததால், சிறிய அளவில் கட்சியினரை அழைத்துக் கொண்டு ம்னு தாக்கல் செய்ய வந்தார் வருண்.
வருண் காந்தி தேரத்லில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
வருண் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்ததையொட்டி தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications