பாதுகாப்பு வளையப் பகுதியில் மக்களுடன்தான் இருக்கிறார் பிரபாகரன் - புலிகள்

Subscribe to Oneindia Tamil

வன்னி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பாதுகாப்பு வளையப் பகுதியில், மக்களுடனேயே இருக்கிறார். இலங்கைப் படையினருக்கு எதிரான தாக்குதலை வழி நடத்தி வருகிறார் என்று புலிகள் இயக்கத்தின் அமைதிச் செயலக அதிகாரி ஜீவரத்தினம் புலித்தேவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டி..

நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் உடனடியாகத் தலையிட்டு அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.

நாங்கள் ஒருபோதும் சரணடையப் போவதில்லை. தொடர்ந்து போர் புரிவோம். தமிழ் மக்களின் ஆதரவுடன் இந்தப் போரில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

முல்லைத்தீவின் கடற்கரைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதியின் எல்லைக்கு அருகாமையில் நா இருக்கிறேன்.

தலைவர் பிரபாகரனும் என்னுடன்தான் இருக்கிறார். சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு எதிரான போரை அவரே நெறிப்படுத்தி வருகிறார். மக்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் அவர் வழங்கி வருகிறார்.

நேரம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கின்றது. ரத்தக்களரி ஒன்று இடம்பெறவிருப்பதால் அனைத்துலக சமூகம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்.

அரசாங்கப் படைகள் திங்கட்கிழமை மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தும் உள்ளனர்.

பொதுமக்கள் எமக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருவதுடன், எம்முடன் இணைந்தும் போராடுகின்றனர். ஏனென்றால் விடுதலைப் புலிகள் அமைப்பு அந்த மக்களுக்காகத்தான் போராடுகின்றது.

அதனால்தான் அவர்கள் சுயவிருப்புடன் எமது அமைப்பில் இணைந்து போராடுகின்றனர் என்று கூறியுள்ளார் புலித்தேவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+