காங். வேட்பாளரால் 5 மணி நேர போக்குவரத்து பாதிப்பு
தேனி: தேனிக்கு வந்த காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜே.எம்.ஆரூணுக்கு வரவேற்பளிக்க அம்மாவட்ட எல்லையில் திமுக கூட்டணியினர் பெரும் திரளாக கூடியதால் அங்கு சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திமுக கூட்டணியில் தேனி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் ஆரூண் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று தேனி வந்த அவருக்கு மாவட்ட எல்லையான காட் ரோட்டில் பகல் 2.30 மணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்டம் முழுவதிலும் இருந்து காங்கிரஸ் கட்சி தொண்டரகள் வந்ததால் அங்கு கூட்டம் கூடியது.
இதையடுத்து அப்பகுதியில் 5 மணி நேரமந் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு 7 மணி வரை வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு வரிசையி்ல் நின்றன.
இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். மேலும் வெளியூர்களில் இருந்து தேனிக்கு வர வேண்டிய பேருந்துகளும் 5 மணி நேரம் காலதாமதாக வந்தன. கம்பம், போடியிலிருந்து தேனி வழியாக வெளியூர் செல்ல வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்து நிலையத்திலேயே காத்திருந்தனர்.
எடுத்த எடுப்பிலேயே மக்களிடம் 'நல்ல பெயர்' வாங்கிவிட்டார் ஆருண்... உருப்படும்!.












Click it and Unblock the Notifications