உடனடி போர் நிறுத்தம்-அத்வானி வேண்டுகோள்
டெல்லி: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ராணுவத்தின் வெறிச்செயலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் பலியாகி வருகிறார்கள். இது குறித்து நேற்று அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடக்கும் படுகொலையை தடுக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. இலங்கையில் நடக்கும் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அங்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இலங்கையின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். அதே சமயம் தமிழர்களுக்கு சம உரிமையும் மரியாதையும் வழங்கப்பட்டு, அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த இரு கொள்கைகளை பின்பற்றி தான் இலங்கையில் அமைதி காண முடியும்.
மத்திய அரசின் தெளிவற்ற வெளியுறவு கொள்கையால் தமிழர்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையில் அமைதியை நிலைநாட்டும் சக்தியாக இருந்த இந்தியாவின் பங்கை காங்கிரஸ் அரசு வெறும் பார்வையாளர் என்ற அளவுக்கு குறைத்து விட்டது. போரை நிறுத்துமாறு இலங்கை அரசை நெருக்க மத்திய அரசு தவறிவிட்டது.
கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கிறது...
காங்கிரஸ் அரசு விடுதலை புலிகளையும், தமிழர்களையும் பிரித்து பார்க்க தவறிவிட்டது. இப்பிரச்சினையில் மத்திய அரசு கண்களை மூடி கொண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு உதவி வருகிறது என்றார் அத்வானி.
-
இந்தியாவை நெருங்கிய போர்.. சைலண்ட் மோடில் மத்திய அரசு! இலங்கை அசத்துதே! -
அதிமுகவிடம் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்! -
11 மணி நேரம் நடுக்கடலில் காக்க வைத்தது ஏன்? ஈரான் போர் கப்பலை அழித்த அமெரிக்கா.. இலங்கை எம்பி கேள்வி -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக












Click it and Unblock the Notifications