சரணடையாத பிரபாகரனுக்கு மன்னிப்பில்லை-ராஜபக்சே

இதுகுறித்து ராஜபக்சே கூறுகையில், எங்களின் மன்னிப்பைப் பெற கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விட்டார் பிரபாகரன். அப்படிச் செய்ததன் மூலம், இனி அவர் அதற்கான விளைவுகளை சந்தித்தாக வேண்டும். அவருக்கு பொது மன்னிப்பு அளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.
பிரபாகரன் எங்கே..?:
இதற்கிடையே மிக குறுகிய வட்டத்துக்குள் விடுதலைப் புலிகளை ராணுவம் சுருக்கி விட்டபோதிலும், புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், அவரது மகன் சார்லஸ் அந்தோணி மற்றும் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் எங்கு இருக்கின்றனர் என்பது தெரியவில்லை.
விடுதலைப் புலிகள் பகுதிகளிலிருந்து தப்பி வரும் தமிழ் மக்களுக்கும் பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே பிரபாகரன் தற்போது ராணுவத்தின் முற்றுகையில் சிக்கியிருக்கும் பகுதியில் இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications