Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தயா மாஸ்டர், ஜார்ஜ் கைது செய்யப்பட்டனர்-சரணடையவில்லை: புலிகள்

Subscribe to Oneindia Tamil

Daya Master and George
வன்னி: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களான தயா மாஸ்டரும், ஜார்ஜும் சரணடையவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது அவர்களை ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்று விட்டனர் என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நுழைந்த ராணுவத்திடம் தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி சரணடைந்ததாக ராணுவம் நேற்று கூறியது. இவர் புலிகளின் செய்திப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

அதே போல புலிகளின் மறைந்த அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி.தமிழ்ச் செல்வனின் உதவியாளராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் இருந்த ஜார்ஜும் தங்களிடம் சரணடைந்துவிட்டதாக ராணுவம் கூறியிருந்தது.

இருவரும் குடும்பத்துடன் சரணடைந்ததாகவும், இருவரையும் விசாரணைக்காக புதுமத்தாளன் பகுதிக்குக் கொண்டு செல்வதாகவும் ராணுவம் தெரிவித்தது.

ஆனால் இதை புலிகள் மறுத்துள்ளனர். தயா மாஸ்டரும், ஜார்ஜும் சரணடையவில்லை. புதுமாத்தளன் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வந்தபோது ராணுவத்தினர் வந்து பிடித்துச் சென்று விட்டதாக புலிகள் தரப்பு கூறியுள்ளது.

ராணுவத்தால் தயா மாஸ்டர் வீல் சேரில் கொண்டு செல்லப்பட்ட காட்சிகளை இலங்கை தொலைக்காட்சி காட்டியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+