தயா மாஸ்டர், ஜார்ஜ் கைது செய்யப்பட்டனர்-சரணடையவில்லை: புலிகள்

புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நுழைந்த ராணுவத்திடம் தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி சரணடைந்ததாக ராணுவம் நேற்று கூறியது. இவர் புலிகளின் செய்திப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
அதே போல புலிகளின் மறைந்த அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி.தமிழ்ச் செல்வனின் உதவியாளராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் இருந்த ஜார்ஜும் தங்களிடம் சரணடைந்துவிட்டதாக ராணுவம் கூறியிருந்தது.
இருவரும் குடும்பத்துடன் சரணடைந்ததாகவும், இருவரையும் விசாரணைக்காக புதுமத்தாளன் பகுதிக்குக் கொண்டு செல்வதாகவும் ராணுவம் தெரிவித்தது.
ஆனால் இதை புலிகள் மறுத்துள்ளனர். தயா மாஸ்டரும், ஜார்ஜும் சரணடையவில்லை. புதுமாத்தளன் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வந்தபோது ராணுவத்தினர் வந்து பிடித்துச் சென்று விட்டதாக புலிகள் தரப்பு கூறியுள்ளது.
ராணுவத்தால் தயா மாஸ்டர் வீல் சேரில் கொண்டு செல்லப்பட்ட காட்சிகளை இலங்கை தொலைக்காட்சி காட்டியது.












Click it and Unblock the Notifications