மனுவில் தவறு-திருப்பி அனுப்பப்பட்ட கார்த்திக்!
விருதுநகர்: வேட்பு மனுவில் நிறைய பிழைகள் இருந்ததால், திரும்பிச் சென்ற நடிகர் கார்த்திக், பின்னர் மாலையில் வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் கார்த்திக். இங்கு பாஜகவின் தாமரைச் சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.
இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக காலை 11 மணிக்கு வந்தார். அவரது வேட்பு மனுவை வாங்கிப் பார்த்த தேர்தல் அதிகாரியான ரகுபதி, அதில் நிறைய தவறுகள் இருப்பதை சுட்டிக் காட்டி திருத்திக் கொண்டு வருமாறு அனுப்பினார்.
இதையடுத்து திரும்பிச் சென்ற கார்த்திக் பின்னர் மாலையில் திரும்ப வந்த வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இப்படித்தான் திருச்சி தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானும் வேட்பு மனு தாக்கல் செய்யப் போனபோது அதில் குளறுபடி இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.