40 தொகுதிகளில் 1320 பேர் மனு தாக்கல்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 1,320 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.
இந்த 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 17ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று மட்டும் 554 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தம் 1,320 வேட்பு மனுக்கள் தாக்கலாகியுள்ளன.
தொகுதிவாரியாக தாக்கலாகியுள்ள வேட்பு மனுக்கள் எண்ணிக்கை:
தென் சென்னை- 58
வட சென்னை- 52
மத்திய சென்னை- 68
காஞ்சீபுரம் (தனி)- 28
ஸ்ரீபெரும்புதூர்- 47
திருவள்ளூர் (தனி)- 22
வேலூர்- 34
அரக்கோணம்- 30
திருவண்ணாமலை- 45
ஆரணி- 21
கடலூர்- 25
சிதம்பரம் (தனி)- 22
விழுப்புரம் (தனி)- 26
கள்ளக்குறிச்சி- 42
சேலம்- 35
நாமக்கல்- 35
தர்மபுரி- 31
கிருஷ்ணகிரி- 35
திண்டுக்கல்- 20
தேனி- 43
மதுரை- 29
ராமநாதபுரம்- 27
விருதுநகர்- 30
சிவகங்கை- 29
திருச்சி- 35
கரூர்- 46
பெரம்பலூர்- 28
தஞ்சை- 23
மயிலாடுதுறை- 38
நாகப்பட்டினம்(தனி)- 13
நெல்லை- 35
தென்காசி (தனி)- 17
தூத்துக்குடி- 32
கன்னியாகுமரி- 28
கோவை- 39
திருப்பூர்- 34
பொள்ளாச்சி- 28
நீலகிரி (தனி)- 25
ஈரோடு- 32
புதுச்சேரி- 33
இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற 27ம் தேதி கடைசி நாள். அதன் பிறகு அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
சுயேட்சை வேட்பாளருக்கான சின்னமும் இந்த இறுதி பட்டியலோடு அறிவிக்கப்படும்.
டோக்கன் கொடுத்து....
சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் கடைசி நேரத்தில் ஏராளமான சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்ததால் அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டன.
இந்த 3 தொகுதிகளில் மட்டும் மொத்தம் 178 மனுக்கள் தாக்கலாகியுள்ளன.