பப்பு யாதவுக்கும், தாயாருக்கும் வயது வித்தியாசம் 7 மட்டுமே - புதிய சிக்கல்
புதுடில்லி: பீகார் முன்னாள் எம்.பி. பப்பு யாதவுக்கும் அவரது தாயாருக்கும் 7 வயது வித்தியாசம் மட்டுமே இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து வயது முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ராஷ்டீரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த பப்பு யாதவ் (இவர் லாலுவின் மச்சான்) கடந்த 2004ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாதேபுரா தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அப்போது வேட்புமனு தாக்கல் செய்த அவர், அதில் தனக்கு 37 வயது என குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி தற்போது அவருக்கு வயது 42 ஆகிறது.
சில காரணங்களுக்காக சமீபத்தில் பாட்னா உயர்நீதி மன்றம் இவருக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதித்தது. இந்நிலையில் பப்புயாதவின் தாயார் சாந்தி பிரியா, வரும் நாடாளுமன்ற தேர்தலில் புர்னே தொகுதியில் காங்கிரசின் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் வேட்புமனு தாக்கலின் போது தனது வயது 49 என குறிப்பிட்டுள்ளார்.
இதையடு்தது அங்கு சர்ச்சை வெடித்துள்ளது. பப்பு யாதவுக்கும், அவரது தாயான இவருக்கும் தற்போது 7 வயது தான் கூடுதலாக உள்ளது. இது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பியுள்ளார் சாந்தி பிரியாவின் போட்டி வேட்பாளர் ஒருவர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் புகார் கொடுத்துள்ளார்.
எனது தவறு இல்லை...
இது குறித்து சாந்தி பிரியா கூறுகையில், இது எனது தவறு எதுவும் இல்லை. வாக்காளர் அடையாள அட்டையில் என்ன வயது உள்ளதோ அதை நான் குறிப்பிட்டு்ள்ளேன் என்றார்.
பீகார் துணை முதல்வர் சுசில் மோடி கூறுகையி்ல், இது வினோதமான வழக்கு. இதை தேர்தல் ஆணையம் தான் கவனிக்க வேண்டும் என்றார்.
-
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
காங்கிரஸின் ஒரே நம்பிக்கையிலும் ஆப்பு.. கேரளா சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! என்ன இப்படி ஆகிடுச்சு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications