Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடுதலைப் புலிகள் வசமிருந்த வலைஞர்மடத்தைப் பிடித்தது ராணுவம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: விடுதலைப் புலிகள் வசம் இருந்த வலைஞர் மடத்தை இன்று ராணுவம் பிடித்துள்ளது. இதையடுத்து விடுதலைப் புலிகள் மேலும் குறுகிய பகுதிக்கு முடக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்திக்குறிப்பு கூறுகையில், ராணுவத்தின் 58வது பிரிவைச் சேர்ந்த வீரர்கள் வலைஞர் மடத்தைப் பிடித்துள்ளனர். இது கடலோர கிராமமாகும். இதன் மூலம் விடுதலைப் புலிகள் மேலும் குறுகலான பகுதிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இன்று காலை வலைஞர்மடம் ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அங்கிருந்து இதுவரை 500 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

புலிகள் வசம் தற்போது வெல்லமுள்ளிவாய்க்கால் பகுதி மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில்தான் வலைஞர்மடம் உள்ளது.

ஜான் ஹோம்ஸ் வருகை..

இதற்கிடையே ஐ.நா. மனிதாபிமான விவகாரப் பிரிவவு தலைவர் ஜான் ஹோம்ஸ், தமிழர் நிலை குறித்து ஆராய கொழும்பு வந்துள்ளார். 2 நாட்கள் அவர் கொழும்பில் இருப்பார்.

தனது பயணத்தின்போது வன்னிப் பகுதியி்ல உள்ள இடம் பெயர்ந்து வந்த தமிழர்கள் தங்கியிருக்கும் முகாம்களை அவர் சுற்றிப் பார்ப்பார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+